| முகப்பு | தொடக்கம் | 
| 
சங்கவருணர் என்னும் நாகரியர் | 
| 
 360 | 
| 
பெரிது ஆராச் சிறு சினத்தர், | |
| 
சில சொல்லான் பல கேள்வியர், | |
| 
நுண் உணர்வினான் பெருங் கொடையர், | |
| 
கலுழ் நனையான் தண் தேறலர், | |
| 
5 | 
கனி குய்யான் கொழுந் துவையர், | 
| 
தாழ் உவந்து தழூஉ மொழியர், | |
| 
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி, | |
| 
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர் | |
| 
சிலரே; பெரும! கேள், இனி: நாளும், | |
| 
10 | 
பலரே, தகையஃது அறியாதோரே; | 
| 
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; | |
| 
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால், | |
| 
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் | |
| 
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப் | |
| 
15 | 
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத | 
| 
கள்ளி போகிய களரி மருங்கின், | |
| 
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு | |
| 
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி, | |
| 
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு, | |
| 
20 | 
அழல் வாய்ப் புக்க பின்னும், | 
| 
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.
 |