| முகப்பு | தொடக்கம் | 
| 
சிறுவெண்டேரையார் | 
| 
 362 | 
| 
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த | |
| 
மதி உறழ் ஆரம் மார்பில் புரள, | |
| 
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப, | |
| 
பொழிலகம் பரந்த பெ................. | |
| 
5 | 
.......................கும விசய வெண் கொடி | 
| 
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை, | |
| 
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின், | |
| 
ஆக் குரல் காண்பின் அந்தணாளர் | |
| 
நான்மறைக் குறி .......................... யின் | |
| 
10 | 
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின் | 
| 
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ, | |
| 
கை பெய்த நீர் கடற் பரப்ப, | |
| 
ஆம் இருந்த அடை நல்கி, | |
| 
சோறு கொடுத்து, மிகப் பெரிதும் | |
| 
15 | 
வீறு சான......................... நன்றும் | 
| 
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின், | |
| 
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் | |
| 
பகலும் கூவும் அகலுள் ஆங்கண், | |
| 
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு, | |
| 
20 | 
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல | 
| 
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி, | |
| 
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. | |
| 
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
 | |
| 
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
 |