| முகப்பு | தொடக்கம் | 
| 
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் | 
| 
 181 | 
| 
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில், | |
| 
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு, | |
| 
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும் | |
| 
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை, | |
| 
5 | 
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை, | 
| 
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்; | |
| 
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின், | |
| 
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன் | |
| 
பகைப் புலம் படராஅளவை, நின் | |
| 
10 | 
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.
 | 
| 
 265 | 
| 
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, | |
| 
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் | |
| 
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, | |
| 
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, | |
| 
5 | 
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! | 
| 
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் | |
| 
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் | |
| 
கடும் பகட்டு யானை வேந்தர் | |
| 
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
 |