| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழன் நல்லுருத்திரன் | 
| 
 190 | 
| 
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர் | |
| 
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் | |
| 
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம் | |
| 
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு | |
| 
5 | 
இயைந்த கேண்மை இல்லாகியரோ! | 
| 
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென, | |
| 
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள், | |
| 
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து, | |
| 
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் | |
| 
10 | 
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து | 
| 
உரனுடையாளர் கேண்மையொடு | |
| 
இயைந்த வைகல் உள ஆகியரோ! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
 |