| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழன் நலங்கிள்ளி | 
| 
 73 | 
| 
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி, | |
| 
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை | |
| 
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்; | |
| 
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து; | |
| 
5 | 
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் | 
| 
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் | |
| 
துஞ்சு புலி இடறிய சிதடன் போல, | |
| 
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் | |
| 
கழை தின் யானைக் கால் அகப்பட்ட | |
| 
10 | 
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண் | 
| 
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய | |
| 
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் | |
| 
பல் இருங் கூந்தல் மகளிர் | |
| 
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
 | 
| 
 75 | 
| 
'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென, | |
| 
பால் தர வந்த பழ விறல் தாயம் | |
| 
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக் | |
| 
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச் | |
| 
5 | 
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே; | 
| 
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் | |
| 
விழுமியோன் பெறுகுவனாயின், தாழ் நீர் | |
| 
அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை | |
| 
என்றூழ் வாடு வறல் போல, நன்றும் | |
| 
10 | 
நொய்தால் அம்ம தானே மை அற்று, | 
| 
விசும்புற ஓங்கிய வெண் குடை, | |
| 
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே. | |
| 
திணை அது; துறை பொருண்மொழிக் காஞ்சி.
 | |
| 
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
 |