| முகப்பு | தொடக்கம் | 
| 
தாயங் கண்ணனார் | 
| 
 356 | 
| 
களரி பரந்து, கள்ளி போகி, | |
| 
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், | |
| 
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு | |
| 
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு; | |
| 
5 | 
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் | 
| 
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப, | |
| 
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து | |
| 
மன்பதைக்கு எல்லாம் தானாய், | |
| 
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
தாயங் கண்ணனார் பாடியது.
 |