| முகப்பு | தொடக்கம் | 
| 
தாயங் கண்ணியார் | 
| 
 250 | 
| 
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில் | |
| 
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர் | |
| 
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர், | |
| 
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி, | |
| 
5 | 
அல்லி உணவின் மனைவியொடு, இனியே | 
| 
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்! | |
| 
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் | |
| 
முனித்தலைப் புதல்வர் தந்தை | |
| 
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
...................தாயங்கண்ணியார் பாடியது.
 |