| முகப்பு | தொடக்கம் | 
| 
திருத்தாமனார் | 
| 
 398 | 
| 
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, | |
| 
வகை மாண் நல் இல்........................ | |
| 
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப, | |
| 
பொய்கைப் பூ முகை மலர, பாணர் | |
| 
5 | 
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, | 
| 
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, | |
| 
பரிசிலர் விசையெ | |
| 
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், | |
| 
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் | |
| 
10 | 
புலியினம் மடிந்த கல் அளை போல, | 
| 
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர், | |
| 
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி, | |
| 
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, | |
| 
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! | |
| 
15 | 
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என | 
| 
என் வரவு அறீஇ, | |
| 
சிறிதிற்குப் பெரிது உவந்து, | |
| 
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் | |
| 
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப் | |
| 
20 | 
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ, | 
| 
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை, | |
| 
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, | |
| 
யான் உண அருளல் அன்றியும், தான் உண் | |
| 
மண்டைய கண்ட மான் வறைக் கருனை, | |
| 
25 | 
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, | 
| 
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும், | |
| 
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, | |
| 
புரையோன் மேனிப் பூத்தசல....................... | |
| 
முரைசெல அருளியோனே | |
| 
30 | 
........................யருவிப் பாயல் கோவே. | 
| 
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
 | |
| 
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.
 |