| முகப்பு | தொடக்கம் | 
| 
தும்பி சொகினனார் | 
| 
 249 | 
| 
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, | |
| 
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, | |
| 
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் | |
| 
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, | |
| 
5 | 
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, | 
| 
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், | |
| 
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் | |
| 
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, | |
| 
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, | |
| 
10 | 
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, | 
| 
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி | |
| 
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, | |
| 
அழுதல் ஆனாக் கண்ணள், | |
| 
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
 |