| முகப்பு | தொடக்கம் | 
| 
துறையூர் ஓடைகிழார் | 
| 
 136 | 
| 
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப | |
| 
இழை வலந்த பல் துன்னத்து | |
| 
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ | |
| 
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த | |
| 
5 | 
பேஎன் பகை என ஒன்று என்கோ? | 
| 
உண்ணாமையின் ஊன் வாடி, | |
| 
தெண் நீரின் கண் மல்கி, | |
| 
கசிவுற்ற என் பல் கிளையொடு | |
| 
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ? | |
| 
10 | 
அன்ன தன்மையும் அறிந்து ஈயார், | 
| 
'நின்னது தா' என, நிலை தளர, | |
| 
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், | |
| 
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் | |
| 
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ? | |
| 
15 | 
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்' | 
| 
எனக் கருதி, பெயர் ஏத்தி, | |
| 
வாய் ஆர நின் இசை நம்பி, | |
| 
சுடர் சுட்ட சுரத்து ஏறி, | |
| 
இவண் வந்த பெரு நசையேம்; | |
| 
20 | 
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; | 
| 
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என, | |
| 
அனைத்து உரைத்தனன் யான் ஆக, | |
| 
நினக்கு ஒத்தது நீ நாடி, | |
| 
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும், | |
| 
25 | 
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை | 
| 
நுண் பல மணலினும் ஏத்தி, | |
| 
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே. | |
| 
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
 | |
| 
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.
 |