| முகப்பு | தொடக்கம் | 
| 
நரிவெரூஉத்தலையார் | 
| 
 5 | 
| 
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, | |
| 
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், | |
| 
கானக நாடனை! நீயோ, பெரும! | |
| 
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: | |
| 
5 | 
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா | 
| 
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், | |
| 
குழவி கொள்பவரின், ஓம்புமதி! | |
| 
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. | |
| 
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
 | |
| 
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
 | 
| 
 195 | 
| 
பல் சான்றீரே! பல் சான்றீரே! | |
| 
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள், | |
| 
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே! | |
| 
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன் | |
| 
5 | 
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; | 
| 
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், | |
| 
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் | |
| 
எல்லாரும் உவப்பது; அன்றியும், | |
| 
நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே. | |
| 
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
 | |
| 
நரிவெரூஉத்தலையார் பாடியது.
 |