| முகப்பு | தொடக்கம் | 
| 
நன்னாகனார் | 
| 
 381 | 
| 
ஊனும் ஊணும் முனையின், இனிது என, | |
| 
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும், | |
| 
அளவுபு கலந்து, மெல்லிது பருகி, | |
| 
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக, | |
| 
5 | 
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என, | 
| 
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது | |
| 
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி, | |
| 
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து, | |
| 
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ், | |
| 
10 | 
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண், | 
| 
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி, | |
| 
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி | |
| 
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி, | |
| 
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின், | |
| 
15 | 
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு | 
| 
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால், | |
| 
இரு நிலம் கூலம் பாற, கோடை | |
| 
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை, | |
| 
சேயைஆயினும், இவணைஆயினும், | |
| 
20 | 
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! | 
| 
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை, | |
| 
ஒலி வெள் அருவி வேங்கட நாடன், | |
| 
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் | |
| 
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று, | |
| 
25 | 
இருங் கோள் ஈராப் பூட்கை, | 
| 
கரும்பனூரன் காதல் மகனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.
 |