| முகப்பு | தொடக்கம் | 
| 
நெடுங்கழுத்துப் பரணர் | 
| 
 291 | 
| 
சிறாஅஅர்! துடியர்! பாடு வல் மகாஅஅர்! | |
| 
தூ வெள் அறுவை மாயோற் குறுகி, | |
| 
இரும் புள் பூசல் ஓம்புமின்; யானும், | |
| 
விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்; | |
| 
5 | 
என் போல் பெரு விதுப்புறுக, வேந்தே | 
| 
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை | |
| 
மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை | |
| 
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே! | |
| 
திணை அது; துறை வேத்தியல்.
 | |
| 
நெடுங்கழுத்துப் பரணர் பாடியது.
 |