| முகப்பு | தொடக்கம் | 
| 
நொச்சி நியமங் கிழார் | 
| 
 293 | 
| 
நிறப் படைக்கு ஒல்கா யானை மேலோன் | |
| 
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை | |
| 
நாண் உடை மாக்கட்கு இரங்குமாயின், | |
| 
எம்மினும் பேர் எழில் இழந்து, வினை எனப் | |
| 
5 | 
பிறர் மனை புகுவள்கொல்லோ | 
| 
அளியள் தானே, பூவிலைப் பெண்டே! | |
| 
திணை காஞ்சி; துறை பூக்கோட் காஞ்சி.
 | |
| 
நொச்சி நியமங் கிழார் பாடியது.
 |