| முகப்பு | தொடக்கம் | 
| 
பக்குடுக்கை நன்கணியார் | 
| 
 194 | 
| 
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் | |
| 
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப, | |
| 
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர் | |
| 
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, | |
| 
5 | 
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! | 
| 
இன்னாது அம்ம, இவ் உலகம்; | |
| 
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே. | |
| 
திணை அது; துறை பெருங் காஞ்சி.
 | |
| 
பக்குடுக்கை நன்கணியார் பாடியது.
 |