| முகப்பு | தொடக்கம் | 
| 
பரணர் | 
| 
 4 | 
| 
வாள், வலம் தர, மறுப் பட்டன | |
| 
செவ் வானத்து வனப்புப் போன்றன; | |
| 
தாள், களம் கொள, கழல் பறைந்தன | |
| 
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன; | |
| 
5 | 
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, | 
| 
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; | |
| 
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, | |
| 
கறுழ் பொருத செவ் வாயான், | |
| 
எருத்து வவ்விய புலி போன்றன; | |
| 
10 | 
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய், | 
| 
நுதி மழுங்கிய வெண் கோட்டான், | |
| 
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; | |
| 
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் | |
| 
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, | |
| 
15 | 
மாக் கடல் நிவந்து எழுதரும் | 
| 
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ | |
| 
அனையை ஆகன்மாறே, | |
| 
தாய் இல் தூவாக் குழவி போல, | |
| 
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. | |
| 
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
 | |
| 
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.
 | 
| 
 63 | 
| 
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, | |
| 
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; | |
| 
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் | |
| 
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே; | |
| 
5 | 
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், | 
| 
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; | |
| 
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், | |
| 
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; | |
| 
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென, | |
| 
10 | 
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, | 
| 
என் ஆவதுகொல்தானே கழனி | |
| 
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் | |
| 
பாசவல் முக்கி, தண் புனல் பாயும், | |
| 
யாணர் அறாஅ வைப்பின் | |
| 
15 | 
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.
 | 
| 
 141 | 
| 
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை | |
| 
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, | |
| 
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, | |
| 
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! | |
| 
5 | 
யாரீரோ?' என, வினவல் ஆனா, | 
| 
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! | |
| 
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, | |
| 
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, | |
| 
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் | |
| 
10 | 
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், | 
| 
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, | |
| 
கடாஅ யானைக் கலி மான் பேகன், | |
| 
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, | |
| 
மறுமை நோக்கின்றோ அன்றே, | |
| 
15 | 
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. | 
| 
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
 | |
| 
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
 | 
| 
 142 | 
| 
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும், | |
| 
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும், | |
| 
வரையா மரபின் மாரிபோல, | |
| 
கடாஅ யானைக் கழல் கால் பேகன் | |
| 
5 | 
கொடைமடம் படுதல் அல்லது, | 
| 
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 144 | 
| 
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர, | |
| 
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின் | |
| 
கார் எதிர் கானம் பாடினேமாக, | |
| 
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் | |
| 
5 | 
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப, | 
| 
இனைதல் ஆனாளாக, 'இளையோய்! | |
| 
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என, | |
| 
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள் | |
| 
முகை புரை விரலின் கண்ணீர் துடையா, | |
| 
10 | 
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி: | 
| 
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும், | |
| 
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன் | |
| 
ஒல்லென ஒலிக்கும் தேரொடு, | |
| 
முல்லை வேலி, நல் ஊரானே.' | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.
 | 
| 
 145 | 
| 
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி, | |
| 
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை, | |
| 
கடாஅ யானைக் கலி மான் பேக! | |
| 
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; | |
| 
5 | 
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ் | 
| 
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, | |
| 
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என, | |
| 
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின், | |
| 
இன மணி நெடுந் தேர் ஏறி, | |
| 
10 | 
இன்னாது உறைவி அரும் படர் களைமே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.
 | 
| 
 336 | 
| 
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே; | |
| 
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்; | |
| 
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் | |
| 
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த | |
| 
5 | 
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே; | 
| 
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க, | |
| 
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்; | |
| 
அறன் இலள் மன்ற தானே விறல் மலை | |
| 
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் | |
| 
10 | 
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் | 
| 
தகை வளர்த்து எடுத்த நகையொடு, | |
| 
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே. | |
| 
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
 | |
| 
பரணர் பாடியது.
 | 
| 
 341 | 
| 
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு | |
| 
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல், | |
| 
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, | |
| 
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின் | |
| 
5 | 
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும் | 
| 
.............................................. | |
| 
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு, | |
| 
மாற்றம் மாறான், மறலிய சினத்தன், | |
| 
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே; | |
| 
10 | 
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல், | 
| 
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை | |
| 
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ | |
| 
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின், | |
| 
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு | |
| 
15 | 
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் | 
| 
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக் | |
| 
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல, | |
| 
பெருங் கவின் இழப்பது கொல்லோ, | |
| 
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பரணர் பாடியது.
 | 
| 
 343 | 
| 
'மீன் நொடுத்து நெல் குவைஇ, | |
| 
மிசை அம்பியின் மனை மறுக்குந்து, | |
| 
மனைக் குவைஇய கறி மூடையால், | |
| 
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து; | |
| 
5 | 
கலம் தந்த பொற் பரிசம் | 
| 
கழித் தோணியான், கரை சேர்க்குந்து; | |
| 
மலைத் தாரமும் கடல் தாரமும் | |
| 
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும் | |
| 
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன் | |
| 
10 | 
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன, | 
| 
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும், | |
| 
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத் | |
| 
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர், | |
| 
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை | |
| 
15 | 
வருந்தின்று கொல்லோ தானே பருந்து உயிர்த்து | 
| 
இடை மதில் சேக்கும் புரிசை, | |
| 
படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பரணர் பாடியது.
 | 
| 
 348 | 
| 
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ, | |
| 
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய, | |
| 
கள் அரிக்கும் குயம், சிறு சில் | |
| 
மீன் சீவும் பாண் சேரி, | |
| 
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, | |
| 
குவளை உண்கண் இவளை, தாயே | |
| 
ஈனாளாயினள்ஆயின், ஆனாது | |
| 
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும், | |
| 
செந் நுதல் யானை பிணிப்ப, | |
| 
10 | 
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பரணர் பாடியது.
 | 
| 
 352 | 
| 
தேஎம் கொண்ட வெண் மண்டையான், | |
| 
வீ..............................................கறக்குந்து; | |
| 
அவல் வகுத்த பசுங் குடையான், | |
| 
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; | |
| 
5 | 
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் | 
| 
குன்று ஏறிப் புனல் பாயின், | |
| 
புற வாயால் புனல் வள | |
| 
............................................. நொடை நறவின் | |
| 
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி | |
| 
10 | 
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் | 
| 
கொடுப்பவும் கொளாஅனெ | |
| 
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், | |
| 
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் | |
| 
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் | |
| 
15 | 
சிறு கோல் உளையும் புரவி ெ.................. | 
| 
.............................................. யமரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பரணர் பாடியது.
 | 
| 
 354 | 
| 
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா | |
| 
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் | |
| 
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்; | |
| 
வயல் அமர் கழனி வாயில் பொய்கை, | |
| 
5 | 
கயல் ஆர் நாரை உகைத்த வாளை | 
| 
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும் | |
| 
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ | |
| 
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை, | |
| 
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை | |
| 
10 | 
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே? | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பரணர் பாடியது.
 | 
| 
 369 | 
| 
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், | |
| 
கருங் கை யானை கொண்மூ ஆக, | |
| 
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த | |
| 
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த | |
| 
5 | 
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, | 
| 
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், | |
| 
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, | |
| 
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த | |
| 
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. | |
| 
10 | 
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, | 
| 
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் | |
| 
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், | |
| 
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, | |
| 
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், | |
| 
15 | 
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, | 
| 
கண நரியோடு கழுது களம் படுப்ப, | |
| 
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, | |
| 
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! | |
| 
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி | |
| 
20 | 
வேய்வை காணா விருந்தின் போர்வை | 
| 
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, | |
| 
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று | |
| 
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, | |
| 
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன | |
| 
25 | 
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, | 
| 
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த | |
| 
வேழ முகவை நல்குமதி | |
| 
தாழா ஈகைத் தகை வெய்யோயே! | |
| 
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
 | |
| 
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
 |