| முகப்பு | தொடக்கம் | 
| 
பாண்டரங் கண்ணனார் | 
| 
 16 | 
| 
வினை மாட்சிய விரை புரவியொடு, | |
| 
மழை உருவின தோல் பரப்பி, | |
| 
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் | |
| 
விளை வயல் கவர்பூட்டி, | |
| 
5 | 
மனை மரம் விறகு ஆகக் | 
| 
கடி துறை நீர்க் களிறு படீஇ, | |
| 
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் | |
| 
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, | |
| 
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, | |
| 
10 | 
துணை வேண்டாச் செரு வென்றி, | 
| 
புலவு வாள், புலர் சாந்தின், | |
| 
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! | |
| 
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், | |
| 
பனிப் பகன்றை, கனிப் பாகல், | |
| 
15 | 
கரும்பு அல்லது காடு அறியாப் | 
| 
பெருந் தண் பணை பாழ் ஆக, | |
| 
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, | |
| 
நாம நல் அமர் செய்ய, | |
| 
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. | |
| 
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
 | |
| 
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
 |