| முகப்பு | தொடக்கம் | 
| 
பாரி மகளிர் | 
| 
 112 | 
| 
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின், | |
| 
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; | |
| 
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், | |
| 
வென்று எறி முரசின் வேந்தர் எம் | |
| 
5 | 
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! | 
| 
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
 | |
| 
பாரி மகளிர் பாடியது.
 |