| முகப்பு | தொடக்கம் | 
| 
பாலை பாடிய பெருங் கடுங்கோ | 
| 
 282 | 
| 
எஃகு உளம் கழிய, இரு நிலம் மருங்கின், | |
| 
அருங் கடன் இறுத்த பெருஞ் செயாளனை, | |
| 
'யாண்டு உளனோ?' என, வினவுதி ஆயின், | |
| 
............................................. | |
| 
5 | 
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் | 
| 
அருங் கடன் இறுமார் வயவர் எறிய, | |
| 
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே; | |
| 
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத் | |
| 
............................................. | |
| 
10 | 
அலகை போகிச் சிதைந்து வேறாகிய | 
| 
பலகை அல்லது, களத்து ஒழியாதே; | |
| 
சேண் விளங்கு நல் இசை நிறீஇ, | |
| 
நா நவில் புலவர் வாய் உளானே. | |
| 
திணை ...................
 | |
| 
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.
 |