| முகப்பு | தொடக்கம் | 
| 
பிரமனார் | 
| 
 357 | 
| 
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண், | |
| 
பொதுமை சுட்டிய மூவர் உலகமும், | |
| 
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும், | |
| 
மாண்ட அன்றே, யாண்டுகள்; துணையே | |
| 
5 | 
வைத்தது அன்றே வெறுக்கை; வி................ | 
| 
.............................................ணை | |
| 
புணை கைவிட்டோர்க்கு அரிதே, துணை அழத் | |
| 
தொக்கு உயிர் வௌவும்காலை, | |
| 
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே. | |
| 
திணை அது; துறை ...................; பெருங்காஞ்சியும் ஆம்.
 | |
| 
பிரமனார் பாடியது.
 |