| முகப்பு | தொடக்கம் | 
| 
புல்லாற்றூர் எயிற்றியனார் | 
| 
 213 | 
| 
மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள், | |
| 
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே! | |
| 
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து, | |
| 
நின்தலை வந்த இருவரை நினைப்பின், | |
| 
5 | 
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர், | 
| 
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்; | |
| 
நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு | |
| 
அனையை அல்லை; அடு மான் தோன்றல்! | |
| 
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ | |
| 
10 | 
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும் | 
| 
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே: | |
| 
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும் | |
| 
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே! | |
| 
நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த | |
| 
15 | 
எண் இல் காட்சி இளையோர் தோற்பின், | 
| 
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? | |
| 
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின், | |
| 
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே; | |
| 
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து | |
| 
20 | 
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு | 
| 
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது | |
| 
செய்தல் வேண்டுமால், நன்றே வானோர் | |
| 
அரும் பெறல் உலகத்து ஆன்றவர் | |
| 
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே. | |
| 
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
 | |
| 
அவன் மக்கள்மேல் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.
 |