| முகப்பு | தொடக்கம் | 
| 
புறத்திணை நன்னாகனார் | 
| 
 176 | 
| 
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் | |
| 
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின், | |
| 
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் | |
| 
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், | |
| 
5 | 
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், | 
| 
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் | |
| 
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை | |
| 
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! | |
| 
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் | |
| 
10 | 
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல, | 
| 
காணாது கழிந்த வைகல், காணா | |
| 
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன் | |
| 
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
 | 
| 
 376 | 
| 
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் | |
| 
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி | |
| 
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச் | |
| 
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ, | |
| 
5 | 
பாணர் ஆரும்அளவை, யான் தன் | 
| 
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்; | |
| 
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென, | |
| 
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற, | |
| 
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத் | |
| 
10 | 
தொன்று படு துளையொடு பரு இழை போகி, | 
| 
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி, | |
| 
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை | |
| 
நின்ற முரற்கை நீக்கி, நன்றும் | |
| 
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு, | |
| 
15 | 
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே, | 
| 
இரவினானே, ஈத்தோன் எந்தை; | |
| 
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும், | |
| 
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்; | |
| 
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்; | |
| 
20 | 
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி, | 
| 
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, | |
| 
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி, | |
| 
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
 | 
| 
 379 | 
| 
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை; | |
| 
அவனே பெறுக, என் நா இசை நுவறல்; | |
| 
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின், | |
| 
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து, | |
| 
5 | 
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் | 
| 
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் | |
| 
வில்லியாதன் கிணையேம்; பெரும! | |
| 
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர் | |
| 
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா, | |
| 
10 | 
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என, | 
| 
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற, | |
| 
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது, | |
| 
விண் தோய் தலைய குன்றம் பின்பட, | |
| 
......................................ர வந்தனென், யானே | |
| 
15 | 
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத் | 
| 
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை | |
| 
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் | |
| 
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே. | |
| 
திணை அது; துறை பரிசில் துறை.
 | |
| 
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
 | 
| 
 384 | 
| 
மென்பாலான் உடன் அணைஇ, | |
| 
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை | |
| 
அறைக் கரும்பின் பூ அருந்தும்; | |
| 
வன்பாலான் கருங் கால் வரகின் | |
| 
5 | 
............................................ | 
| 
அம் கண் குறு முயல வெருவ, அயல | |
| 
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; | |
| 
விழவு இன்றாயினும், உழவர் மண்டை | |
| 
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; | |
| 
10 | 
.............................................கிணையேம், பெரும! | 
| 
நெல் என்னா, பொன் என்னா, | |
| 
கனற்றக் கொண்ட நறவு என்னா, | |
| 
.....................மனை என்னா, அவை பலவும் | |
| 
யான் தண்டவும், தான் தண்டான், | |
| 
15 | 
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, | 
| 
மண் நாணப் புகழ் வேட்டு, | |
| 
நீர் நாண நெய் வழங்கி, | |
| 
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... | |
| 
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு | |
| 
20 | 
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட | 
| 
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், | |
| 
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், | |
| 
வந்த வைகல் அல்லது, | |
| 
சென்ற எல்லைச் செலவு அறியேனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
 |