| முகப்பு | தொடக்கம் | 
| 
பூங்கண் உத்திரையார் | 
| 
 277 | 
| 
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன | |
| 
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் | |
| 
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை | |
| 
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர் | |
| 
5 | 
நோன் கழை துயல்வரும் வெதிரத்து | 
| 
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே. | |
| 
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
 | |
| 
பூங்கண் உத்திரையார் பாடியது.
 |