| முகப்பு | தொடக்கம் | 
| 
பூதப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு | 
| 
 246 | 
| 
பல் சான்றீரே! பல் சான்றீரே! | |
| 
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும், | |
| 
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! | |
| 
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட | |
| 
5 | 
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது, | 
| 
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம், | |
| 
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட | |
| 
வேளை வெந்தை, வல்சி ஆக, | |
| 
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் | |
| 
10 | 
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ; | 
| 
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம் | |
| 
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் | |
| 
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற | |
| 
வள் இதழ் அவிழ்ந்த தாமரை | |
| 
15 | 
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! | 
| 
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
 | |
| 
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.
 |