| முகப்பு | தொடக்கம் | 
| 
பெருங்குன்றூர் கிழார் | 
| 
 147 | 
| 
கல் முழை அருவிப் பல் மலை நீந்தி, | |
| 
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை, | |
| 
கார் வான் இன் உறை தமியள் கேளா, | |
| 
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும் | |
| 
5 | 
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை | 
| 
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல் | |
| 
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி, | |
| 
புது மலர் கஞல, இன்று பெயரின், | |
| 
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
 | 
| 
 210 | 
| 
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது, | |
| 
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு, | |
| 
நும்மனோரும் மற்று இனையர் ஆயின், | |
| 
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ; | |
| 
5 | 
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி | 
| 
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின் | |
| 
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால், | |
| 
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப் | |
| 
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என | |
| 
10 | 
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் | 
| 
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை | |
| 
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்: | |
| 
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர் | |
| 
அருங் கடி முனை அரண் போலப் | |
| 
15 | 
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.
 | 
| 
 211 | 
| 
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு | |
| 
அணங்குடை அரவின் அருந் தலை துமிய, | |
| 
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர, | |
| 
குன்று தூவ எறியும் அரவம் போல, | |
| 
5 | 
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, | 
| 
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் | |
| 
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென், | |
| 
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என, | |
| 
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் | |
| 
10 | 
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள் | 
| 
கை உள்ளது போல் காட்டி, வழி நாள் | |
| 
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் | |
| 
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என் | |
| 
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி, | |
| 
15 | 
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் | 
| 
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச் | |
| 
செல்வல் அத்தை, யானே வைகலும், | |
| 
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, | |
| 
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின், | |
| 
20 | 
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து, | 
| 
முலைக்கோள் மறந்த புதல்வனொடு, | |
| 
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 266 | 
| 
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி, | |
| 
கயம் களி முளியும் கோடைஆயினும், | |
| 
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல், | |
| 
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை | |
| 
5 | 
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் | 
| 
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்! | |
| 
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! | |
| 
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், | |
| 
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல, | |
| 
10 | 
வல்லே களைமதிஅத்தை உள்ளிய | 
| 
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை, | |
| 
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என் | |
| 
அறிவு கெட நின்ற நல்கூர்மையே! | |
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
 | |
| 
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
 | 
| 
 318 | 
| 
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க, | |
| 
மயில்அம் சாயல் மாஅயோளொடு | |
| 
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே | |
| 
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல், | |
| 
5 | 
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் | 
| 
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை, | |
| 
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் | |
| 
புன் புறப் பெடையொடு வதியும் | |
| 
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பெருங் குன்றூர் கிழார் பாடியது.
 |