| முகப்பு | தொடக்கம் | 
| 
பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார் | 
| 
 83 | 
| 
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என் | |
| 
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே; | |
| 
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; | |
| 
என் போல் பெரு விதுப்புறுக என்றும் | |
| 
5 | 
ஒரு பாற் படாஅதாகி, | 
| 
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே! | |
| 
திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
 | |
| 
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.
 | 
| 
 84 | 
| 
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே; | |
| 
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே; | |
| 
போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே, | |
| 
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண், | |
| 
5 | 
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு | 
| 
உமணர் வெரூஉம் துறையன்னன்னே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 85 | 
| 
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், | |
| 
என்னைக்கு நாடு இஃது அன்மையானும், | |
| 
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே; | |
| 
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே; | |
| 
5 | 
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே; | 
| 
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், | |
| 
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று, | |
| 
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |