| முகப்பு | தொடக்கம் | 
| 
பெருஞ்சித்திரனார் | 
| 
 158 | 
| 
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், | |
| 
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, | |
| 
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் | |
| 
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் | |
| 
5 | 
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; | 
| 
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, | |
| 
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; | |
| 
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், | |
| 
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; | |
| 
10 | 
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, | 
| 
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, | |
| 
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி | |
| 
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று | |
| 
உள்ளி வருநர் உலைவு நனி தீர, | |
| 
15 | 
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, | 
| 
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு | |
| 
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் | |
| 
பாடி வருநரும் பிறரும் கூடி | |
| 
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் | |
| 
20 | 
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் | 
| 
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, | |
| 
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, | |
| 
முள் புற முது கனி பெற்ற கடுவன் | |
| 
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், | |
| 
25 | 
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! | 
| 
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! | |
| 
இசை மேந்தோன்றிய வண்மையொடு, | |
| 
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! | |
| 
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
 | |
| 
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
 | 
| 
 159 | 
| 
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின், | |
| 
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து, | |
| 
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி, | |
| 
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று, | |
| 
5 | 
முன்றில் போகா முதிர்வினள் யாயும்; | 
| 
பசந்த மேனியொடு படர் அட வருந்தி, | |
| 
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் | |
| 
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து, | |
| 
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த | |
| 
10 | 
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று, | 
| 
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று, | |
| 
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து, | |
| 
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா, | |
| 
துவ்வாளாகிய என் வெய்யோளும்; | |
| 
15 | 
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் | 
| 
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை, | |
| 
ஐவனம் வித்தி, மையுறக் கவினி, | |
| 
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக் | |
| 
கருவி வானம் தலைஇ யாங்கும், | |
| 
20 | 
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என், | 
| 
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப | |
| 
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், | |
| 
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ | |
| 
இன்புற விடுதிஆயின், சிறிது | |
| 
25 | 
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண! | 
| 
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் | |
| 
வசை இல் விழுத் திணைப் பிறந்த | |
| 
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே. | |
| 
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 160 | 
| 
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த | |
| 
முளி புல் கானம் குழைப்ப, கல்லென | |
| 
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு, | |
| 
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை | |
| 
5 | 
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய | 
| 
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென, | |
| 
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில், | |
| 
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற | |
| 
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ, | |
| 
10 | 
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என, | 
| 
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி, | |
| 
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன், | |
| 
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே; | |
| 
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என, | |
| 
15 | 
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, | 
| 
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, | |
| 
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும் | |
| 
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் | |
| 
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன், | |
| 
20 | 
கூழும் சோறும் கடைஇ, ஊழின் | 
| 
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு, | |
| 
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும், | |
| 
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி, | |
| 
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும் | |
| 
25 | 
வினவல் ஆனாளாகி, நனவின் | 
| 
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப, | |
| 
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே | |
| 
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை | |
| 
நீர் சூழ் நிலவரை உயர, நின் | |
| 
30 | 
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 161 | 
| 
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, | |
| 
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ, | |
| 
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு, | |
| 
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, | |
| 
5 | 
வள மழை மாறிய என்றூழ்க் காலை, | 
| 
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக் | |
| 
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, | |
| 
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின், | |
| 
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர, | |
| 
10 | 
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று, | 
| 
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு, | |
| 
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக் | |
| 
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, | |
| 
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் | |
| 
15 | 
தாள் படு செல்வம் காண்தொறும் மருள, | 
| 
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய | |
| 
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, | |
| 
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் | |
| 
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, | |
| 
20 | 
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்! | 
| 
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் | |
| 
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி! | |
| 
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே, | |
| 
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த | |
| 
25 | 
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் | 
| 
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப் | |
| 
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் | |
| 
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல, | |
| 
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின் | |
| 
30 | 
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப, | 
| 
வாள் அமர் உழந்த நின் தானையும், | |
| 
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே. | |
| 
திணை அது; துறை பரிசில் துறை.
 | |
| 
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.
 | 
| 
 162 | 
| 
இரவலர் புரவலை நீயும் அல்லை; | |
| 
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; | |
| 
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு | |
| 
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க் | |
| 
5 | 
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த | 
| 
நெடு நல் யானை எம் பரிசில்; | |
| 
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. | |
| 
திணை அது; துறை பரிசில் விடை.
 | |
| 
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,
 | 
| 
 163 | 
| 
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும், | |
| 
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும், | |
| 
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் | |
| 
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும், | |
| 
5 | 
இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது, | 
| 
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் | |
| 
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே! | |
| 
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன் | |
| 
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே. | |
| 
திணை அது; துறை பரிசில்
 | |
| 
பெருஞ் சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.
 | 
| 
 207 | 
| 
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, | |
| 
பருகு அன்ன வேட்கை இல்வழி, | |
| 
அருகில் கண்டும் அறியார் போல, | |
| 
அகம் நக வாரா முகன் அழி பரிசில் | |
| 
5 | 
தாள் இலாளர் வேளார் அல்லர்? | 
| 
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே | |
| 
பெரிதே உலகம்; பேணுநர் பலரே; | |
| 
மீளி முன்பின் ஆளி போல, | |
| 
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென | |
| 
10 | 
நோவாதோன்வயின் திரங்கி, | 
| 
வாயா வன் கனிக்கு உலமருவோரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
 | 
| 
 208 | 
| 
'குன்றும் மலையும் பல பின் ஒழிய, | |
| 
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என | |
| 
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு, | |
| 
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை | |
| 
5 | 
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்? | 
| 
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர் | |
| 
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி, | |
| 
தினை அனைத்துஆயினும், இனிது அவர் | |
| 
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.
 | 
| 
 237 | 
| 
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, | |
| 
பாடி நின்ற பசி நாட்கண்ணே, | |
| 
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, | |
| 
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் | |
| 
5 | 
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என | 
| 
நச்சி இருந்த நசை பழுதாக, | |
| 
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, | |
| 
'அளியர்தாமே ஆர்க' என்னா | |
| 
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, | |
| 
10 | 
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் | 
| 
வாழைப் பூவின் வளை முறி சிதற, | |
| 
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, | |
| 
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, | |
| 
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: | |
| 
15 | 
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் | 
| 
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், | |
| 
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் | |
| 
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, | |
| 
நனியுடைப் பரிசில் தருகம், | |
| 
20 | 
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
 | 
| 
 238 | 
| 
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த | |
| 
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா, | |
| 
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி, | |
| 
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் | |
| 
5 | 
காடு முன்னினனே, கள் காமுறுநன்; | 
| 
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி, | |
| 
பாடுநர் கடும்பும் பையென்றனவே; | |
| 
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே; | |
| 
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே; | |
| 
10 | 
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப, | 
| 
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்; | |
| 
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற | |
| 
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே? | |
| 
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின், | |
| 
15 | 
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் | 
| 
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு, | |
| 
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, | |
| 
அவல மறு சுழி மறுகலின், | |
| 
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
 |