| முகப்பு | தொடக்கம் | 
| 
பெரும் பதுமனார் | 
| 
 199 | 
| 
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் | |
| 
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் | |
| 
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்; | |
| 
அனையர் வாழியோ இரவலர்; அவரைப் | |
| 
5 | 
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர் | 
| 
உடைமை ஆகும், அவர் உடைமை; | |
| 
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பெரும்பதுமனார் பாட்டு.
 |