| முகப்பு | தொடக்கம் | 
| 
பேய் மகள் இளவெயினி | 
| 
 11 | 
| 
அரி மயிர்த் திரள் முன்கை, | |
| 
வால் இழை, மட மங்கையர் | |
| 
வரி மணல் புனை பாவைக்குக் | |
| 
குலவுச் சினைப் பூக் கொய்து, | |
| 
5 | 
தண் பொருநைப் புனல் பாயும், | 
| 
விண் பொரு புகழ், விறல் வஞ்சி, | |
| 
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே, | |
| 
வெப்பு உடைய அரண் கடந்து, | |
| 
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே; | |
| 
10 | 
புறம் பெற்ற வய வேந்தன் | 
| 
மறம் பாடிய பாடினியும்மே, | |
| 
ஏர் உடைய விழுக் கழஞ்சின், | |
| 
சீர் உடைய இழை பெற்றிசினே; | |
| 
இழை பெற்ற பாடினிக்குக் | |
| 
15 | 
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே, | 
| 
என ஆங்கு, | |
| 
ஒள் அழல் புரிந்த தாமரை | |
| 
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே. | |
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
 | |
| 
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.
 |