| முகப்பு | தொடக்கம் | 
| 
பொத்தியார் | 
| 
 217 | 
| 
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, | |
| 
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்; | |
| 
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் | |
| 
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, | |
| 
5 | 
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, | 
| 
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; | |
| 
'வருவன்' என்ற கோனது பெருமையும், | |
| 
அது பழுது இன்றி வந்தவன் அறிவும், | |
| 
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; | |
| 
10 | 
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் | 
| 
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை | |
| 
அன்னோனை இழந்த இவ் உலகம் | |
| 
என் ஆவதுகொல்? அளியது தானே! | |
| 
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
 | |
| 
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.
 | 
| 
 220 | 
| 
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த | |
| 
பெருங் களிறு இழந்த பைதல் பாகன் | |
| 
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை, | |
| 
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு, | |
| 
5 | 
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த் | 
| 
தேர் வண் கிள்ளி போகிய | |
| 
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.
 | 
| 
 221 | 
| 
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே; | |
| 
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே; | |
| 
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே; | |
| 
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே; | |
| 
5 | 
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; | 
| 
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; | |
| 
அனையன் என்னாது, அத் தக்கோனை, | |
| 
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று; | |
| 
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை | |
| 
10 | 
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்! | 
| 
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க, | |
| 
கெடு இல் நல் இசை சூடி, | |
| 
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் நடுகல் கண்டு அவர் பாடியது.
 | 
| 
 222 | 
| 
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி, | |
| 
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த | |
| 
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என, | |
| 
என் இவண் ஒழித்த அன்பிலாள! | |
| 
5 | 
எண்ணாது இருக்குவை அல்லை; | 
| 
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.
 | 
| 
 223 | 
| 
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி, | |
| 
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி, | |
| 
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும், | |
| 
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு | |
| 
5 | 
இன் உயிர் விரும்பும் கிழமைத் | 
| 
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
 |