| முகப்பு | தொடக்கம் | 
| 
பொய்கையார் | 
| 
 48 | 
| 
கோதை மார்பின் கோதையானும், | |
| 
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும், | |
| 
மாக் கழி மலர்ந்த நெய்தலானும், | |
| 
கள் நாறும்மே, கானலம் தொண்டி; | |
| 
5 | 
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்; | 
| 
அன்னோற் படர்தியாயின், நீயும் | |
| 
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல! | |
| 
'அமர் மேம்படூஉம் காலை, நின் | |
| 
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே. | |
| 
திணை பாடாண் திணை; துறை புலவராற்றுப் படை.
 | |
| 
சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.
 | 
| 
 49 | 
| 
நாடன் என்கோ? ஊரன் என்கோ? | |
| 
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ? | |
| 
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை? | |
| 
புனவர் தட்டை புடைப்பின், அயலது | |
| 
5 | 
இறங்கு கதிர் அலமரு கழனியும், | 
| 
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே! | |
| 
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |