| முகப்பு | தொடக்கம் | 
| 
பொருந்தில் இளங்கீரனார் | 
| 
 53 | 
| 
முதிர் வார் இப்பி முத்த வார் மணல், | |
| 
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து, | |
| 
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் | |
| 
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற | |
| 
5 | 
களம் கொள் யானை, கடு மான், பொறைய! | 
| 
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; | |
| 
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை | |
| 
கைம்முற்றல, நின் புகழே, என்றும்; | |
| 
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து | |
| 
10 | 
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது | 
| 
செறுத்த செய்யுள் செய் செந் நாவின், | |
| 
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் | |
| 
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின் | |
| 
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப, | |
| 
15 | 
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.
 |