| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | 
| 
 388 | 
| 
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், | |
| 
பள்ளம், வாடிய பயன் இல் காலை, | |
| 
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் | |
| 
............................................பொருந்தி, | |
| 
5 | 
தன் நிலை அறியுநனாக, அந் நிலை, | 
| 
இடுக்கண் இரியல் போக, உடைய | |
| 
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல், | |
| 
............................................னாமருப்பாக, | |
| 
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி | |
| 
10 | 
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, | 
| 
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, | |
| 
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா | |
| 
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், | |
| 
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை | |
| 
15 | 
அண்ணல் யானை வழுதி, | 
| 
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே! | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
 |