| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | 
| 
 329 | 
| 
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப் | |
| 
புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி, | |
| 
நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளீஇய, | |
| 
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும், | |
| 
5 | 
அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று | 
| 
அரவு உறை புற்றத்து அற்றே நாளும் | |
| 
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு | |
| 
அருகாது ஈயும் வண்மை, | |
| 
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.
 |