| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரை இளங் கண்ணிக் கௌசிகனார் | 
| 
 309 | 
| 
இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் | |
| 
இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; | |
| 
நல் அரா உறையும் புற்றம் போலவும், | |
| 
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும், | |
| 
5 | 
மாற்று அருந் துப்பின் மாற்றோர், 'பாசறை | 
| 
உளன்' என வெரூஉம் ஓர் ஒளி | |
| 
வலன் உயர் நெடு வேல் என்னைகண்ணதுவே. | |
| 
திணை தும்பை; துறை நூழிலாட்டு.
 | |
| 
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது.
 |