| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் | 
| 
 350 | 
| 
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், | |
| 
சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர் | |
| 
யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது? | |
| 
படு மழை உருமின் இரங்கு முரசின் | |
| 
5 | 
கடு மான் வேந்தர் காலை வந்து, எம் | 
| 
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ; | |
| 
பொருதாது அமைகுவர்அல்லர் போர் உழந்து, | |
| 
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய | |
| 
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண், | |
| 
10 | 
தொடி பிறழ் முன்கை, இளையோள் | 
| 
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது.
 |