| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரைக் கணக்காயனார் | 
| 
 330 | 
| 
வேந்துடைத் தானை முனை கெட நெரிதர, | |
| 
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி, | |
| 
தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு | |
| 
ஆழி அனையன்மாதோ என்றும் | |
| 
5 | 
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் | 
| 
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த் | |
| 
தொன்மை சுட்டிய வண்மையோனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மதுரைக் கணக்காயனார் பாடியது.
 |