| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரைத் தமிழக் கூத்தனார் | 
| 
 334 | 
| 
காமரு பழனக் கண்பின் அன்ன | |
| 
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல், | |
| 
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின், | |
| 
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு | |
| 
5 | 
..................... ன் ஊரே மனையோள் | 
| 
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும், | |
| 
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே; | |
| 
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த | |
| 
பொலம் .............................. ப் | |
| 
10 | 
பரிசில் பரிசிலர்க்கு ஈய, | 
| 
உரவு வேல் காளையும் கை தூவானே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.
 |