| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரை நக்கீரர் | 
| 
 395 | 
| 
மென் புலத்து வயல் உழவர் | |
| 
வன் புலத்துப் பகடு விட்டு, | |
| 
குறு முயலின் குழைச் சூட்டொடு | |
| 
நெடு வாளைப் பல் உவியல், | |
| 
5 | 
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, | 
| 
புதல் தளவின் பூச் சூடி, | |
| 
.............................................. | |
| 
...........................அரியலாருந்து; | |
| 
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, | |
| 
10 | 
கானக் கோழிக் கவர் குரலொடு | 
| 
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; | |
| 
வேய் அன்ன மென் தோளால், | |
| 
மயில் அன்ன மென் சாயலார், | |
| 
கிளி கடியின்னே, | |
| 
15 | 
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; | 
| 
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் | |
| 
சீர் சான்ற விழுச் சிறப்பின், | |
| 
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் | |
| 
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, | |
| 
20 | 
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் | 
| 
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! | |
| 
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, | |
| 
கதிர் நனி செ ...................................... மாலை, | |
| 
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், | |
| 
25 | 
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, | 
| 
ஆங்கு நின்ற எற்கண்டு, | |
| 
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், | |
| 
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, | |
| 
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் | |
| 
30 | 
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை | 
| 
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, | |
| 
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; | |
| 
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், | |
| 
மிக வானுள் எரி தோன்றினும், | |
| 
35 | 
குள மீனொடும் தாள் புகையினும், | 
| 
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் | |
| 
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, | |
| 
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, | |
| 
உள்ளதும் இல்லதும் அறியாது, | |
| 
40 | 
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
 |