| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரைப் பூதன் இளநாகனார் | 
| 
 276 | 
| 
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல், | |
| 
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை, | |
| 
செம் முது பெண்டின் காதலம் சிறாஅன், | |
| 
மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த | |
| 
5 | 
குடப் பால் சில் உறை போல, | 
| 
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே. | |
| 
திணை அது; துறை தானை நிலை.
 | |
| 
மதுரைப் பூதன் இளநாகனார் பாடியது.
 |