| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரை மருதன் இளநாகனார் | 
| 
 55 | 
| 
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, | |
| 
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, | |
| 
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த | |
| 
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் | |
| 
5 | 
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, | 
| 
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! | |
| 
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், | |
| 
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என | |
| 
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட | |
| 
10 | 
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; | 
| 
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, | |
| 
'பிறர்' எனக் குணம் கொல்லாது, | |
| 
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், | |
| 
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், | |
| 
15 | 
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், | 
| 
உடையை ஆகி, இல்லோர் கையற, | |
| 
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் | |
| 
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் | |
| 
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, | |
| 
20 | 
கடு வளி தொகுப்ப ஈண்டிய | 
| 
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! | |
| 
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
 | |
| 
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
 | 
| 
 349 | 
| 
நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா, | |
| 
கடிய கூறும், வேந்தே; தந்தையும், | |
| 
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே; | |
| 
இஃது இவர் படிவம்: ஆயின், வை எயிற்று, | |
| 
5 | 
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை, | 
| 
மரம் படு சிறு தீப் போல, | |
| 
அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
 |