| முகப்பு | தொடக்கம் | 
| 
மருதன் இளநாகனார் | 
| 
 52 | 
| 
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ, | |
| 
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், | |
| 
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து, | |
| 
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு, | |
| 
5 | 
வட புல மன்னர் வாட, அடல் குறித்து, | 
| 
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி! | |
| 
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து | |
| 
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும் | |
| 
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி | |
| 
10 | 
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் | 
| 
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே | |
| 
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் | |
| 
பலி கண் மாறிய பாழ்படு பொதியில், | |
| 
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த | |
| 
15 | 
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக் | 
| 
கான வாரணம் ஈனும் | |
| 
காடு ஆகி விளியும் நாடு உடையோரே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
 | 
| 
 138 | 
| 
ஆனினம் கலித்த அதர் பல கடந்து, | |
| 
மானினம் கலித்த மலை பின் ஒழிய, | |
| 
மீனினம் கலித்த துறை பல நீந்தி, | |
| 
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ், | |
| 
5 | 
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! | 
| 
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை, | |
| 
'மாறி வா' என மொழியலன் மாதோ; | |
| 
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன் | |
| 
கிளி மரீஇய வியன் புனத்து | |
| 
10 | 
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின், | 
| 
நின்னை வருதல் அறிந்தனர் யாரே? | |
| 
திணை அது; துறை பாணாற்றுப்படை.
 | |
| 
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
 | 
| 
 139 | 
| 
சுவல் அழுந்தப் பல காய | |
| 
சில் ஓதிப் பல் இளைஞருமே, | |
| 
அடி வருந்த நெடிது ஏறிய | |
| 
கொடி மருங்குல் விறலியருமே, | |
| 
5 | 
வாழ்தல் வேண்டிப் | 
| 
பொய் கூறேன்; மெய் கூறுவல்; | |
| 
ஓடாப் பூட்கை உரவோர் மருக! | |
| 
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந! | |
| 
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி, | |
| 
10 | 
கனி பதம் பார்க்கும் காலை அன்றே; | 
| 
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச் | |
| 
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை, | |
| 
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள், | |
| 
அருஞ் சமம் வருகுவதுஆயின், | |
| 
15 | 
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே. | 
| 
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |