| முகப்பு | தொடக்கம் | 
| 
மாங்குடி கிழார் | 
| 
 24 | 
| 
நெல் அரியும் இருந் தொழுவர் | |
| 
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், | |
| 
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; | |
| 
திண் திமில் வன் பரதவர் | |
| 
5 | 
வெப்பு உடைய மட்டு உண்டு, | 
| 
தண் குரவைச் சீர் தூங்குந்து; | |
| 
தூவல் கலித்த தேம் பாய் புன்னை | |
| 
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் | |
| 
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; | |
| 
10 | 
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் | 
| 
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் | |
| 
இரும் பனையின் குரும்பை நீரும், | |
| 
பூங் கரும்பின் தீம் சாறும், | |
| 
ஓங்கு மணல் குவவுத் தாழைத் | |
| 
15 | 
தீம் நீரொடு உடன் விராஅய், | 
| 
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; | |
| 
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய | |
| 
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி | |
| 
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் | |
| 
20 | 
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், | 
| 
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், | |
| 
குப்பை நெல்லின், முத்தூறு தந்த | |
| 
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! | |
| 
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது | |
| 
25 | 
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே | 
| 
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு | |
| 
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் | |
| 
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த | |
| 
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, | |
| 
30 | 
இரவல் மாக்கள் ஈகை நுவல, | 
| 
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய | |
| 
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, | |
| 
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது | |
| 
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, | |
| 
35 | 
மலர் தலை உலகத்துத் தோன்றி, | 
| 
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. | |
| 
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
 | |
| 
அவனை மாங்குடி கிழார் பாடியது.
 | 
| 
 26 | 
| 
நளி கடல் இருங் குட்டத்து | |
| 
வளி புடைத்த கலம் போல, | |
| 
களிறு சென்று களன் அகற்றவும், | |
| 
களன் அகற்றிய வியல் ஆங்கண் | |
| 
5 | 
ஒளிறு இலைய எஃகு ஏந்தி, | 
| 
அரைசு பட அமர் உழக்கி, | |
| 
உரை செல முரசு வௌவி, | |
| 
முடித் தலை அடுப்பு ஆக, | |
| 
புனல் குருதி உலைக் கொளீஇ, | |
| 
10 | 
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின், | 
| 
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! | |
| 
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, | |
| 
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக, | |
| 
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய | |
| 
15 | 
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே! | 
| 
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு | |
| 
மாற்றார் என்னும் பெயர் பெற்று, | |
| 
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை மாங்குடி கிழார் பாடியது.
 | 
| 
 313 | 
| 
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் | |
| 
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் | |
| 
காணிய சென்ற இரவல் மாக்கள் | |
| 
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ; | |
| 
5 | 
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட | 
| 
கழி முரி குன்றத்து அற்றே, | |
| 
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. | |
| 
திணை அது; துறை வல்லாண் முல்லை.
 | |
| 
மாங்குடி கிழார் பாடியது.
 | 
| 
 335 | 
| 
அடல் அருந் துப்பின்.................... | |
| 
...................குருந்தே முல்லை என்று | |
| 
இந் நான்கு அல்லது பூவும் இல்லை; | |
| 
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே, | |
| 
5 | 
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு, | 
| 
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை; | |
| 
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று | |
| 
இந் நான்கு அல்லது குடியும் இல்லை; | |
| 
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி, | |
| 
10 | 
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென, | 
| 
கல்லே பரவின் அல்லது, | |
| 
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மாங்குடி கிழார் பாடியது.
 | 
| 
 372 | 
| 
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி, | |
| 
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த | |
| 
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி, | |
| 
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை, | |
| 
5 | 
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின், | 
| 
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல், | |
| 
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின், | |
| 
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட | |
| 
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, | |
| 
10 | 
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் | 
| 
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப் | |
| 
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின் | |
| 
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே. | |
| 
திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
 | |
| 
அவனை மாங்குடி கிழார் பாடியது.
 | 
| 
 396 | 
| 
கீழ் நீரான் மீன் வழங்குந்து; | |
| 
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து; | |
| 
கழி சுற்றிய விளை கழனி, | |
| 
அரிப் பறையான் புள் ஓப்புந்து; | |
| 
5 | 
நெடுநீர் கூஉம் மணல் தண் கான் | 
| 
மென் பறையான் புள் இரியுந்து; | |
| 
நனைக் கள்ளின் மனைக் கோசர் | |
| 
தீம் தேறல் நறவு மகிழ்ந்து, | |
| 
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து; | |
| 
10 | 
உள் இலோர்க்கு வலி ஆகுவன், | 
| 
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன், | |
| 
கழுமிய வென் வேல் வேளே, | |
| 
வள நீர் வாட்டாற்று எழினியாதன்; | |
| 
கிணையேம், பெரும! | |
| 
15 | 
கொழுந் தடிய சூடு என்கோ? | 
| 
வள நனையின் மட்டு என்கோ? | |
| 
குறு முயலின் நிணம் பெய்தந்த | |
| 
நறு நெய்ய சோறு என்கோ? | |
| 
திறந்து மறந்த கூட்டுமுதல் | |
| 
20 | 
முகந்து கொள்ளும் உணவு என்கோ? | 
| 
அன்னவை பல பல | |
| 
.............................................ருநதய | |
| 
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய | |
| 
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை; | |
| 
25 | 
எம்மோர் ஆக்கக் கங்குண்டே; | 
| 
மாரி வானத்து மீன் நாப்பண், | |
| 
விரி கதிர வெண் திங்களின், | |
| 
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை! | |
| 
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும் | |
| 
30 | 
நிரைசால் நன் கலன் நல்கி, | 
| 
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.
 |