| முகப்பு | தொடக்கம் | 
| 
மாற்பித்தியார் | 
| 
 251 | 
| 
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், | |
| 
பாவை அன்ன குறுந் தொடி மகளிர் | |
| 
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் | |
| 
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி, | |
| 
5 | 
கான யானை தந்த விறகின் | 
| 
கடுந் தெறல் செந் தீ வேட்டு, | |
| 
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே! | |
| 
திணை வாகை; துறை தாபத வாகை.
 | |
| 
....................மாற்பித்தியார் பாடியது.
 | 
| 
 252 | 
| 
கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, | |
| 
தில்லை அன்ன புல்லென் சடையோடு, | |
| 
அள் இலைத் தாளி கொய்யுமோனே | |
| 
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் | |
| 
5 | 
சொல் வலை வேட்டுவன் ஆயினன், முன்னே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |