| முகப்பு | தொடக்கம் | 
| 
முரஞ்சியூர் முடி நாகராயர் | 
| 
 2 | 
| 
மண் திணிந்த நிலனும், | |
| 
நிலன் ஏந்திய விசும்பும், | |
| 
விசும்பு தைவரு வளியும், | |
| 
வளித் தலைஇய தீயும், | |
| 
5 | 
தீ முரணிய நீரும், என்றாங்கு | 
| 
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல | |
| 
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், | |
| 
வலியும், தெறலும், அளியும், உடையோய்! | |
| 
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் | |
| 
10 | 
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும், | 
| 
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந! | |
| 
வான வரம்பனை! நீயோ, பெரும! | |
| 
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ, | |
| 
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை | |
| 
15 | 
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய, | 
| 
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! | |
| 
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், | |
| 
நாஅல் வேத நெறி திரியினும், | |
| 
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி, | |
| 
20 | 
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து, | 
| 
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை, | |
| 
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும் | |
| 
முத் தீ விளக்கின், துஞ்சும் | |
| 
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே! | |
| 
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
 | |
| 
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.
 |