| முகப்பு | தொடக்கம் | 
| 
மோசி கீரனார் | 
| 
 50 | 
| 
மாசு அற விசித்த வார்புறு வள்பின் | |
| 
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை | |
| 
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், | |
| 
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி, | |
| 
5 | 
குருதி வேட்கை உரு கெழு முரசம் | 
| 
மண்ணி வாரா அளவை, எண்ணெய் | |
| 
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை | |
| 
அறியாது ஏறிய என்னைத் தெறுவர, | |
| 
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை | |
| 
10 | 
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; | 
| 
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் | |
| 
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென | |
| 
வீசியோயே; வியலிடம் கமழ, | |
| 
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது | |
| 
15 | 
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை | 
| 
விளங்கக் கேட்ட மாறுகொல் | |
| 
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே? | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.
 | 
| 
 154 | 
| 
திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும், | |
| 
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும் | |
| 
சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல், | |
| 
அரசர் உழையராகவும், புரை தபு | |
| 
5 | 
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்: அதனால், | 
| 
யானும், 'பெற்றது ஊதியம்; பேறு யாது?' என்னேன்; | |
| 
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே; | |
| 
'ஈ' என இரத்தலோ அரிதே; நீ அது | |
| 
நல்கினும், நல்காய் ஆயினும், வெல் போர் | |
| 
10 | 
எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் | 
| 
தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் | |
| 
தண் பல இழிதரும் அருவி நின் | |
| 
கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே. | |
| 
திணை அது; துறை பரிசில் துறை.
 | |
| 
கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது.
 | 
| 
 155 | 
| 
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, | |
| 
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என, | |
| 
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின், | |
| 
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ | |
| 
5 | 
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு, | 
| 
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் | |
| 
கொண் பெருங் கானத்துக் கிழவன் | |
| 
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே. | |
| 
திணை அது; துறை பாணாற்றுப்படை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 156 | 
| 
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும் | |
| 
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்; | |
| 
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் | |
| 
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று | |
| 
5 | 
நிறை அருந் தானை வேந்தரைத் | 
| 
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே. | |
| 
திணை அது; துறை இயன் மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 186 | 
| 
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; | |
| 
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்: | |
| 
அதனால், யான் உயிர் என்பது அறிகை | |
| 
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மோசிகீரனார் பாடியது.
 |