| முகப்பு | தொடக்கம் | 
| 
வட நெடுந்தத்தனார் | 
| 
 179 | 
| 
'ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, | |
| 
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை | |
| 
மலர்ப்போர் யார்?' என வினவலின், மலைந்தோர் | |
| 
விசி பிணி முரசமொடு மண் பல தந்த | |
| 
5 | 
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன், | 
| 
படை வேண்டுவழி வாள் உதவியும், | |
| 
வினை வேண்டுவழி அறிவு உதவியும், | |
| 
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து | |
| 
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து, | |
| 
10 | 
தோலா நல் இசை, நாலை கிழவன், | 
| 
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த் | |
| 
திருந்து வேல் நாகன் கூறினர், பலரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
நாலை கிழவன் நாகனை வடநெடுந் தத்தனார் பாடியது.
 |