| முகப்பு | தொடக்கம் | 
| 
வடம வண்ணக்கன் தாமோதரனார் | 
| 
 172 | 
| 
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; | |
| 
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் | |
| 
பாடு வல் விறலியர் கோதையும் புனைக; | |
| 
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் | |
| 
5 | 
பரியல் வேண்டா; வரு பதம் நாடி, | 
| 
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், | |
| 
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் | |
| 
வன் புல நாடன், வய மான் பிட்டன்: | |
| 
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை | |
| 
10 | 
மா வள் ஈகைக் கோதையும், | 
| 
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.
 |