| முகப்பு | தொடக்கம் | 
| 
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | 
| 
 198 | 
| 
'அருவி தாழ்ந்த பெரு வரை போல | |
| 
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா, | |
| 
கடவுள் சான்ற கற்பின், சேயிழை | |
| 
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க் | |
| 
5 | 
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி, | 
| 
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி, | |
| 
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் | |
| 
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, | |
| 
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம், | |
| 
10 | 
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், | 
| 
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த | |
| 
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக, | |
| 
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல் | |
| 
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும், | |
| 
15 | 
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும் | 
| 
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின் | |
| 
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்! | |
| 
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப் | |
| 
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும், | |
| 
20 | 
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும், | 
| 
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், | |
| 
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, | |
| 
நீடு வாழிய! நெடுந்தகை! யானும் | |
| 
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும், | |
| 
25 | 
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின் | 
| 
அடி நிழல் பழகிய அடியுறை; | |
| 
கடுமான் மாற! மறவாதீமே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.
 |