| முகப்பு | தொடக்கம் | 
| 
வட மோதங் கிழார் | 
| 
 260 | 
| 
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து, | |
| 
விளரி உறுதரும் தீம் தொடை நினையா, | |
| 
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள் | |
| 
உளரும் கூந்தல் நோக்கி, களர | |
| 
5 | 
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி, | 
| 
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ, | |
| 
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம் | |
| 
பாண! கேண்மதி, யாணரது நிலையே: | |
| 
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து | |
| 
10 | 
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், | 
| 
கையுள் போலும்; கடிது அண்மையவே | |
| 
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர் | |
| 
நெடு நிரை தழீஇய மீளியாளர் | |
| 
விடு கணை நீத்தம் துடி புணை ஆக, | |
| 
15 | 
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, | 
| 
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் | |
| 
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் | |
| 
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் | |
| 
நிரையொடு வந்த உரையன் ஆகி, | |
| 
20 | 
உரி களை அரவம் மான, தானே | 
| 
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, | |
| 
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று, | |
| 
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, | |
| 
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே; | |
| 
25 | 
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, | 
| 
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, | |
| 
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி, | |
| 
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. | |
| 
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
 | |
| 
......................வடமோதங் கிழார் பாடியது.
 |